Monday, April 16, 2018

மன்னார் பிரதேச சபையின் தலைவர் பத‌வி பறிபோனது அவமானமே!

மன்னார் பிரதேச சபையின் தலைவர்  பத‌வி பறிபோனது அவமானமே!
                                         கடந்த உள்ளூர் சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்ததின் விளைவு, தற்போது பிரதேச சபையின் தலைவர் பதவி கைநழுவிப்போயுள்ளது. இலங்கையில் இனப்பிரச்சனை முரண்பட்ட காலம் முதல். முஸ்லிம் சமூகம் பல அனுகூலங்களை பெற்றுவருகின்றது. முஸ்லிம் சமூகமும், அதன் தலைமைகளும், முஸ்லீம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளனர். சிறுபாண்மை சமூகத்தின் பாதுகாப்பு இலங்கையில் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பொருளாதாரத்தை முன்னேற்றி ஒரு  சில நாட்களில், இனக்கலவரம் என்ற போர்வையில் பறி கொடுப்பதும், வரலாற்றில் காலகாலமாக நாம் கற்றுவந்த பாடம்! இதனை அண்மையில் நடந்த கண்டி முஸ்லிம் கலவரம் நல்லதோர் அனுபவம்! இருந்தபோதும் முஸ்லீம் சமூகம் இதனை உணர்வதாக தெரியவில்லை. தமிழ் தேசியத்தின் இருப்பு, அதன் பாதுகாப்பு ஊடாகவே முஸ்லிம் மக்களது உரிமை பாதுகாக்கப்படும் என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தி, தமது வெற்றிகளை முஸ்லீம் சமூகம் பெற்றுக்கொள்வது அபாயகரமான தற்கொலை முயற்ச்சியாகும்.

  மறு கோணத்தில் உற்று நோக்கினால் இதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த உள் கட்சி முரண்பாடுகள் ஒரு காரனம். இதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதும், அதன் சிதைவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இதைத்தான் வங்காலை பேசாலையில் உள்ள சில அரசியல் முகவர்கள் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவது வேதனையானது இனிவர இருக்கும் தேர்தல்களில் வங்காலை பேசாலை தலைமன்னார் மக்கள் மிக கவனமாக செயல்படவேண்டும். முஸ்லிம் தலைமை அதிகாரத்தை கைப்பற்றினால், சமூர்த்தி, பஸ் கொண்டக்டர், சதோசாவில் மாவு நிறுக்கின்ற  தொழில், புகையிரத சேவையில் கட்டை அடுக்கும் தொழில் இப்படியான் சில்லறைத்தனமான் ஒரு சில தொழில் வாய்ப்புகளையே முஸ்லீம் சமூகம் எமது தமிழ் இளைஞர்களுக்கு வீசும்! அதனை நீங்கள் கவ்விக்கொள்ளுங்கள். அமைச்சர்களாக இருக்கும் முஸ்லிம் அமைச்சுகளில் தரமான பதவி தமிழர்களுக்கு இல்லை என்பதை நான் உறுதிபடச்சொல்கின்றேன். என்வே நஎம் உறவுகளே விழிப்பாக இருங்கள் என்பதை மீண்டும் சொல்கின்றென்.அன்புடன் பேசலைதாஸ்     

No comments:

Post a Comment